ஞாயிறு, 15 ஜனவரி, 2017

கருகும் உணவு.

எங்கள் பயிர்களுக்கு
ரசாயணம்
உணவாய் விற்கப்படுகிறது
எங்களுக்கும் புழுக்களுக்கும்
ரசாயனம்
உயிர்கொல்லியாய் விற்கப்படுகிறது.
தண்ணீரை காசாக்க
துணை போகும் ஆளுமைகள்
எங்கள் செந்நீர் உறைவதை
ஊதாசினப்படுத்துகின்றன.
பெய்யும் நீர் எல்லாம்
கடலில் கலக்க
கண்ணீர் பெருநீராய்
விளைநிலங்களை நனைக்கிறது
எங்கள் உயிர் மட்டும்
தரிசின் பிளவுகளை பிரியாமல்
காற்றினில் அலைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக