வியாழன், 19 ஜனவரி, 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.10.

எங்கள் விடுமுறைகால
பகல் வீடாய் இருந்த ஆலமரம்
வெட்டி வீழ்த்தப்ட்டபோது
கிளையை குழந்தைகளுக்காக
நட்டு வைத்தோம் ......

கிளை மரத்தின் கீழ்
குழுந்தைதைகள் காண கிடைப்பதில்லை
அதன் விழுதும் கிளையும்   குழந்தைகளுக்காக
ஏங்கி கிடக்கின்றன.....

ஊர் செல்லும் போது
எப்பொழுதும் பார்க்கிறேன்
கிளை மரத்தின்
வெறுமையை ஏக்கத்தை ....

ஒரு முறையேனும் நானாவது
அதன் விழுது பிடித்து
ஊஞ்சலாடி விட வேண்டும்
யாரும் பார்க்காத நேரத்தில் .......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக