சனி, 21 ஜனவரி, 2017

தலைபில்லா கவிதைகள் . கவிதை .11 .

மனிதர்கள் பாலைவனத்தை
கண்டடைந்த பிறகு
இலை பரப்பி மரத்தின் நிழலை
நாடுகிறார்கள்...

ஒவ்வொரு கணமும்
நிழல் நகர்வை
பின் தொடர்கிறார்கள்...

வெப்பக்காற்றை விரும்பி
ஏற்கிறார்கள்
சில்லென வீசும் தென்றலை
அனுபவிக்கிறார்கள்.....

முடிவில் இருளை
சென்றடைகிறார்கள் .



வியாழன், 19 ஜனவரி, 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.10.

எங்கள் விடுமுறைகால
பகல் வீடாய் இருந்த ஆலமரம்
வெட்டி வீழ்த்தப்ட்டபோது
கிளையை குழந்தைகளுக்காக
நட்டு வைத்தோம் ......

கிளை மரத்தின் கீழ்
குழுந்தைதைகள் காண கிடைப்பதில்லை
அதன் விழுதும் கிளையும்   குழந்தைகளுக்காக
ஏங்கி கிடக்கின்றன.....

ஊர் செல்லும் போது
எப்பொழுதும் பார்க்கிறேன்
கிளை மரத்தின்
வெறுமையை ஏக்கத்தை ....

ஒரு முறையேனும் நானாவது
அதன் விழுது பிடித்து
ஊஞ்சலாடி விட வேண்டும்
யாரும் பார்க்காத நேரத்தில் .......


ஞாயிறு, 15 ஜனவரி, 2017

கருகும் உணவு.

எங்கள் பயிர்களுக்கு
ரசாயணம்
உணவாய் விற்கப்படுகிறது
எங்களுக்கும் புழுக்களுக்கும்
ரசாயனம்
உயிர்கொல்லியாய் விற்கப்படுகிறது.
தண்ணீரை காசாக்க
துணை போகும் ஆளுமைகள்
எங்கள் செந்நீர் உறைவதை
ஊதாசினப்படுத்துகின்றன.
பெய்யும் நீர் எல்லாம்
கடலில் கலக்க
கண்ணீர் பெருநீராய்
விளைநிலங்களை நனைக்கிறது
எங்கள் உயிர் மட்டும்
தரிசின் பிளவுகளை பிரியாமல்
காற்றினில் அலைகிறது.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.9.

தொலைதூரத்தில்
சிரிப்பலைகள்
அழுகுரல்கள்
ஓயாத பேச்சுகள்
கார் கிரிச்சிடும் சத்தங்கள்
அரசியல்வாவாதியின்
ஆரவாரங்கள்
சாமியார்களின்
உபதேசங்கள்
களியாட்டங்கள்
பணத்தாள் உதிர்ந்து விழும் சத்தம்
நெருங்கியும் செல்கிறேன்
விலகியும் நிற்கிறேன்.