ஞாயிறு, 11 ஜூன், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.17.

அவள் அவளிடத்தில்
நின்று கொண்டிருந்தாள்
நான் சென்று இணைத்துக் கொண்டேன்
என் வாழ்வை அவளுடன்
ஒன்றைாயொன்று நேரெதிராக
இரட்டை கோடுகளாக உணர்ந்தேன்
தள்ளி வந்து
தன் இசையை கேட்டேன்
தன் நடனத்தை ஆடினேன்
தனக்கான புத்தகங்களை
தேடித் திரிந்தேன்
எனக்கான பயணத்தை பயணித்தேன்
தள்ளி நிற்பது அப்படியொன்றும்
எளிமையாகவும் சுலபமாகவும்
இருக்கவில்லை
அவளை நோக்கி நகர்ந்தேன்
அவள் அவளிடத்தில் தான்
நின்று கொண்டிருந்தாள்
எங்கேயும் நகராமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக