சனி, 10 ஜூன், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை. 16.

சில கால்கள் அருவருப்பானவை
அவை நம் உடலை கூச செய்பவை
தொட்டுக் கும்பிட்டே ஆக வேண்டிய
கால்கள் காலாச்சார நிழலை
போர்த்தி கொண்டிருப்பவை
எத்தனை உயரத்தில் கால்கள்
இருந்தாலும் தொட்டு விட
துடிக்கும் மனிதர்கள் உண்டு
தொடவே முடியாத கால்கள் உண்டு
நீங்கள் எத்தனை முறை விழுந்து
கும்பிட்டாலும்
சூட்டையும் சேற்றையும்
பொருட்படுத்தாத கால்களை
எவரும் பொருட்டாக கொள்வதில்லை
கால்களுக்கான மரியாதை
அவரவர் தேவைகளுக்கான
வெளிச்சத்தில் தஞ்சம் அடைகிறது
பிண்ணி பிணைந்திருக்கும் கால்கள்
பரவசம் தரக்கூடியவை
உங்கள் முகத்தில் உரசி கொள்ளும்
கால்கள் பரிசுத்தமானவை
விழிக்கும் போது உங்கள்
முகத்தில் கிடந்தாலும்
அவை வளராதவரை .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக