சனி, 22 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள்.

ஒரு கோட்டின் மீது
பயணித்து கொண்டு இருக்கிறது
விழித்திருக்கும் மனம்
முடிவில்லா கோடாய்...
நிற்கும் போதும்
நடக்கும் போதும்
ஒவ்வொரு அசைவின் போதும்
என்னை விட்டு
முன்போ பின்போ
வலதோ  இடதோ
இறந்தக்காலத்திலோ
எதிர்க்காலத்திலோ
நின்று கொண்டிருக்கிறது....
எப்போதும் என்னுடன்
இருப்பதும் இல்லை
இருக்கப்போவதும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக