சனி, 15 ஏப்ரல், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 14.

நான் எப்பொழுதும்
பேருந்து காத்திருப்புக்காக
அமரும் சிமெண்ட் தரையில்
எறும்பு கூட்டம் ஒன்று
அதை என் விரலை குவித்து
தட்டி விட்டேன் புல்தரையில்
இப்போது தான் பார்க்கிறேன்
வெண்மையான உணவு உருண்டை
அந்த தரையில் கிடைப்பதை
வேறொரு இடத்தில் அமர்ந்தேன்
அதை தட்டி விடாமல்
அந்த கூட்டம் அதை தேடி
வரும் என்ற நம்பிக்கையுடன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக