மலைவாழ் அம்மன்
நாலரை மணிக்கு எழுந்து
நாலு மலை தாண்டி
நாலு மணி நேரம் இலை பறித்தால்
அறுபது பறிப்பு கூலி என்றது
ஆதி தமிழ் அம்மன்
ஒரு நாளு முழுக்க கல்லு சுமந்து
கூரை ஏற்றினால்
நூற்றைம்பது என்றது
வேடர் அம்மன்
மதியம் ஆற்றில் இறங்கி
சாயநேர வரை சேறு தடவி
இராலு பிடித்தால்
அம்பது நூறு கிடைக்கும் என்றது
தோப்பு அம்மன்
ஊற வைத்த வோலையை
நாள் முழுக்க வேய்ந்தால்
நாற்பது என்றது
மீனவ அம்மன்
கூடை மீன் சுமந்து
நாலு ஊரும் நாற்பது தெருவும் கூவினால்
நூறோ நூற்றைம்பதோ
வரும்படி என்றது.
ஏல அம்மன்
அம்பது , எம்பது , நூறு
நூத்தம்பது , இரநூறு
நாலு மணிக்கணக்கா
ஏலம் கூவினா இரநூறு
கூவு கூலி என்றது
வேளான் அம்மன்
ஆறு மணிக்கு சேத்துல இறங்கி
ஆறு மணி நேர நாட்டு நட்டா
நூற்றைம்பது நடவு கூலி என்றது
தன் தலைமுறை ஒளிர்வுக்காக
ஓடாய் தேய்ந்த
அம்மன்களை
நாலு கூடை மண் அள்ளி
நாலு மணி உக்கார்ந்திருந்தா
உனக்கு என்பது எனக்கு இருவது
கூட்டு சேர்த்தது
கையூட்டு
ஆட்சியதிகார
அதிகாரவர்க்கம்.
நாலரை மணிக்கு எழுந்து
நாலு மலை தாண்டி
நாலு மணி நேரம் இலை பறித்தால்
அறுபது பறிப்பு கூலி என்றது
ஆதி தமிழ் அம்மன்
ஒரு நாளு முழுக்க கல்லு சுமந்து
கூரை ஏற்றினால்
நூற்றைம்பது என்றது
வேடர் அம்மன்
மதியம் ஆற்றில் இறங்கி
சாயநேர வரை சேறு தடவி
இராலு பிடித்தால்
அம்பது நூறு கிடைக்கும் என்றது
தோப்பு அம்மன்
ஊற வைத்த வோலையை
நாள் முழுக்க வேய்ந்தால்
நாற்பது என்றது
மீனவ அம்மன்
கூடை மீன் சுமந்து
நாலு ஊரும் நாற்பது தெருவும் கூவினால்
நூறோ நூற்றைம்பதோ
வரும்படி என்றது.
ஏல அம்மன்
அம்பது , எம்பது , நூறு
நூத்தம்பது , இரநூறு
நாலு மணிக்கணக்கா
ஏலம் கூவினா இரநூறு
கூவு கூலி என்றது
வேளான் அம்மன்
ஆறு மணிக்கு சேத்துல இறங்கி
ஆறு மணி நேர நாட்டு நட்டா
நூற்றைம்பது நடவு கூலி என்றது
தன் தலைமுறை ஒளிர்வுக்காக
ஓடாய் தேய்ந்த
அம்மன்களை
நாலு கூடை மண் அள்ளி
நாலு மணி உக்கார்ந்திருந்தா
உனக்கு என்பது எனக்கு இருவது
கூட்டு சேர்த்தது
கையூட்டு
ஆட்சியதிகார
அதிகாரவர்க்கம்.