சனி, 4 மார்ச், 2017

தலைப்பில்லா கவிதைகள். கவிதை.12.

பால்ய கால பருவத்தில்
எனக்கு கிடைக்க பெறும்
பணத்தாள்கள்
ஒரு நாள் மீனின்
கவிச்சியும்
மற்றொரு நாள் இராலின்
வீச்சத்தையும்
இன்னொரு நாள் நண்டின்
நாற்றத்தையும்
பிறகொரு நாள் கருவாட்டின்
மணத்தையும்
தன்னகத்தே கொண்டிருக்கும்.
எந்த வீச்சமானாலும்
நான் அதை மறுதலிப்பதில்லை.
ஏனெனில்
அது.....
தெய்வத்தின்
உடம்பு
சுருக்குப்பை
புடவைமுடிச்சு
இன்னபிற.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக