சனி, 11 நவம்பர், 2017

தலைப்பில்லாக் கவிதைகள். கவிதை 19.

சில மனிதர்கள் சிங்கங்களை
தன் அருகில் வைத்து கொள்ள
விரும்புகிறார்கள்
இரத்த ருசிக்காக தன்னை
குதறும் என்று அறியாமல்
சிலர் பாம்புகளை தன் அருகில்
வைத்துக் கொள்கிறார்கள்
அதன் படமெடுத்து
ஆடும் அழகுக்காக
அதன் விசத்தை அகற்ற என்றேனும்
மறந்து விடலாம் என்பதறியாமல்
சிலர் மான்களை அருகில்
வைத்துக் கொள்கிறார்கள்
அதன் கொம்பின் வலுவிற்காக
அது சிங்கத்தின் மாமிசம்
என்றறியாமல்
சிலர் கிளிகளை கூண்டில் அடைத்து
வைத்துக் கொள்கிறார்கள்
அது இரவு முழுவதும் கீறீச்சிட்டு
தன்னை தொல்லை தரும்
என்றறிந்தும்
பலர் தன்னை தானே கூண்டில்
அடைத்து கொள்கிறார்கள்
அதுவே பாதுகாப்பானது என்று
அவர்கள் எண்ணக் கூடும்
அப்படி இல்லையெனினும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக