சனி, 22 அக்டோபர், 2016

தலைப்பில்லா கவிதைகள். கவிதை 8.

மரங்களை உற்று கவனியுங்கள்
மரக்கிளையில் அமர்ந்து
அதனை மனிதர்கள்
வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்
எளிதாக விரைவாக
வெட்டுவதே இலக்கு
அவர்கள் நம்புகிறார்கள்
மரத்தின் கீழ் வலை
இழுத்து  கட்டப்பட்டிருப்பதாய்
யார்
நான், நீ
நாங்கள் , நீங்கள்
அவன் , அவள்
இவர்கள் , அவர்கள்
வெறொருவருமில்லை.